Monday, 26 May 2014

                     விடுதலை

சுதந்திரம் கொண்ட நாடு இது – இங்கு
சுகம் பெற மட்டும் வழியில்லை
சொந்தம் கொண்டாட உறவில்லை
சோகம் மறைத்தும் பயனில்லை

எண்ணம் எல்லாம் ஏட்டோடு
எழுதி வைத்தான் அன்று பாட்டோடு
நித்தம் எல்லாம் நிசப்தமே – இங்கு
நித்திரையிலும் இல்லை நிம்மதியே

வன்மை மட்டும் தொடர்கிறதே
உண்மைக்கோ இல்லை உயர்வுகளே
சிகரங்கள் தொட நினைத்தாலும்
சிதைவுகளே முடியாமல் தொடர்கிறதே..

பேசி சிரித்தால் வாயாடி
பேசாமல் போனால் நயவஞ்சகி
அமைதி கொண்டால் அழுத்தக்காரி
ஆத்திரம் கொண்டால் கோபக்காரி - பிறறை
பற்றி பேசினால் சூழ்ச்சிக்காரி- தன்னை
பற்றி பேசி போனால் சுயநலவாதி
போர் தொடுத்து உயிரை விட்டது அந்தக்காலம் - இன்று
பேர் வைத்தே உயிரை எடுக்குது இந்தக்காலம் L

சுதந்திர  நாட்டில் சுதந்திரம் இல்லை – இங்கு
விடுதலை கிடைத்தும் விடுவிக்கவில்லை
ஒன்று பட்டு உண்டு வாழ்வோம்
என படித்தால் மட்டும் போதாது – உலகே
தனியே இயங்கும் செயர்க்கை வாழ்க்கை
மிகிழ்வு நமக்கு தாராது ...... J



                     -------------சௌந்தர்யா-------------

No comments:

Post a Comment