ஓவியம்
அங்கலாய்த்துப் போனேன் –
நான்
ஆச்சர்யத்திலே நின்றேன்
இன்னிசையும் மறந்தேன் – நெஞ்சில்
ஈரமொன்று கண்டேன்
உளி கண்ட சிலையை விட
ஊமை உருவமே உயர்வென்று
கொண்டேன்
எட்டாவது அதிசியமோ
என்றே வியந்தேன்
ஏதோ ஒன்று ஈர்ப்பதை
நானும் அறிந்தேன்
ஐயங்கள் இல்லாது அதிசயத்தை
அடைந்தேன்
ஒன்றல்ல ஓராயிறம் முறை
காணத் துடித்தேன்
ஓயாமல் ரசித்தே கண்
எடுக்க மறுத்தேன்
ஔ வண்ணமே எனை அங்கு பறிகொடுத்தேன்
படர்ந்தேன்
பினைந்தேன்
அஃதனைத்திலும்
தொடர்ந்தேன் – எனை
மேவியதையும் உணராது
அவ்வோவியத்தில் அகிலமும் மறந்து என்னையே நானும் இழந்தேன் ...
சௌந்தர்யா
No comments:
Post a Comment