Tuesday, 27 May 2014

கணவனுக்கு ஒரு கவி
.
.
.
எளிதாக கிடைத்த உன் உறவு
என் வாழ்வில் வந்த புது வரவு

வசந்தங்கள் எல்லாம்
வந்தது உன்னாலே
வருத்தங்கள் எல்லாம்
மறைந்தது  தன்னாலே

என்ன உள்ளது பெண்ணில்
ஆண் கவிதை படி புரிந்துபோகும்
என்ன இல்லை ஆண்-ல்
பெண் மனதை திற தெரிந்துவிடும்

கண்ணுக்குள்  நீ வேண்டும் – கணவனே
உன்னுடனே என் வாழ்க்கை கடக்க வேண்டும்
 நெஞ்சுக்குள் நீ வேண்டும்  – நண்பனை
போல்  நீ என்னுடனே என்றும் தொடர வேண்டும்


தினம் ஒரு கவி நீ படைப்பாய் – அதை
தினந்தோறும் நான் படிக்கவேண்டும்
இனி ஒரு பிரிவு வந்தாலும் – உனக்கு
முன்னமே  நான் இறக்கவேண்டும்

அன்பென்ற வார்த்தையிலே - இவ்
உலகம் நகர்கிறது
அதைமட்டும் வாழ்க்கையிலே – என்
மனம் கேட்டு துடிக்கிறது

உணவு கூட திகட்டிவிடும் -
உறவு திகட்டுவதில்லை
கனவு கூட கலைந்துவிடும்
உன் நினைவு மறைவதில்லை

 சற்று சோகம் உனக்கென்றால்
சஞ்சலங்கலை நானே தீர்க்கவேண்டும்
நெற்றி பொட்டு அழியாமல்
உனக்கு முன்னே நான் உயிர் துறக்க வேண்டும் J

-          சௌந்தர்யா -






No comments:

Post a Comment