கணவனுக்கு ஒரு கவி
.
.
.
எளிதாக கிடைத்த உன்
உறவு
என் வாழ்வில் வந்த புது
வரவு
வசந்தங்கள் எல்லாம்
வந்தது உன்னாலே
வருத்தங்கள் எல்லாம்
மறைந்தது தன்னாலே
என்ன உள்ளது பெண்ணில்
ஆண் கவிதை படி
புரிந்துபோகும்
என்ன இல்லை ஆண்-ல்
பெண் மனதை திற
தெரிந்துவிடும்
கண்ணுக்குள் நீ வேண்டும் – கணவனே
உன்னுடனே என் வாழ்க்கை
கடக்க வேண்டும்
நெஞ்சுக்குள் நீ வேண்டும் – நண்பனை
போல் நீ என்னுடனே என்றும் தொடர வேண்டும்
தினம் ஒரு கவி நீ
படைப்பாய் – அதை
தினந்தோறும் நான்
படிக்கவேண்டும்
இனி ஒரு பிரிவு
வந்தாலும் – உனக்கு
முன்னமே நான் இறக்கவேண்டும்
அன்பென்ற வார்த்தையிலே
- இவ்
உலகம் நகர்கிறது
அதைமட்டும்
வாழ்க்கையிலே – என்
மனம் கேட்டு
துடிக்கிறது
உணவு கூட திகட்டிவிடும்
-
உறவு திகட்டுவதில்லை
கனவு கூட கலைந்துவிடும்
உன் நினைவு மறைவதில்லை
சற்று சோகம் உனக்கென்றால்
சஞ்சலங்கலை நானே தீர்க்கவேண்டும்
நெற்றி பொட்டு அழியாமல்
உனக்கு முன்னே நான்
உயிர் துறக்க வேண்டும் J
-
சௌந்தர்யா -
No comments:
Post a Comment