Tuesday, 22 July 2014

விரும்புகிறேன் தனிமையை
.
.
.
 நான் என்ற வீட்டுக்குள்
நானாகி போகின்றேன்

சண்டைகள் இருக்காது – இங்கு
சமாதானங்கள் இருக்காது

எதிர்பார்ப்பு இருக்காது – எந்த ஒரு
ஏமாற்றங்களும் இருக்காது

வலிகள் இருக்காது – அங்கு
வேதைனையும் வாராது..

அன்பை அலைகழிக்க ஆள் இருக்காது
அனைப்பை தூக்கி  எரிய ஆள் இருக்காது

 நூரு முறையேனும் தூக்கி எரியுங்கள்
துக்கமில்லை
தனிமையை விரும்புபவள் நான்
ஆயிரம் முறையேனும் அலட்சியபடுத்துங்கள்
 பெரிதில்லை
தனிமையை  விரும்புபவள் நான்
கோடி முறையேனும் கீழ்த்தனமாய் பேசுங்கள்
வலியில்லை
தனிமையை விரும்புபவள் நான்

சிறு புன்னகை கூட பொய்யாக
உதிர்க்காமல் வாழ்ந்து பார்த்தேன்
தெரியவில்லை அப்போது
உண்மை காதல் எப்போதும்
ஜெயிக்காது என்று!!

பேசவில்லை யாருடனும்
விரும்புகிறேன் தனிமையை
பழகவில்லை யாருடனும்
விரும்புகிறேன் தனிமையை


பேசி பேசித் தீர்ப்பவள் நான்
இன்று
வார்த்தை தேடி அலைகின்றேன்
காதலித்தே கரைபவள் நான்
இன்று
கண்ணீரில் தள்ளாடுகிறேன்..

கெஞ்சி கெஞ்சி வாழவேண்டாம்
கெஞ்சல்களே இனி இருக்காது

வலிகளுக்கு  ஆறுதல் என் தனிமையே
கவலையை தீர்ப்பது இந்த கவிதையே!
         
           சௌந்தர்யா







No comments:

Post a Comment