
முத்திப்போனால் முதியோர் இல்லமா...
.
.
.
வக்கீல் பேசவில்லை
மருத்துவர் பார்க்கவில்லை
ஆசிரியர் வழி நடத்தவில்லை
இருந்தாலும் கண்டிக்க யாருமில்லை
இது மூன்றும் என் பிள்ளை..
வாதாடி பேசியது யாருக்கோ
சிகிச்சை பார்த்தது யாருக்கோ
பாடம் நடத்தியது யாருக்கோ
முதியோர் இல்லம் மட்டும் இறுதியில்
எங்களுக்கோ!
சுடுகிறது நெருப்பல்ல
வதைக்கிறது தவிப்பல்ல
வலிக்கிறது உடல்அல்ல
சுட்டது வார்த்தை
வதைத்தது வறுமை
வலிக்கிறது முதுமை..
--சௌந்தர்யா--
No comments:
Post a Comment