Saturday, 26 July 2014






















ஆடல் தோற்றுப்போனது
பெண் கூந்தல் அசைவிற்க்கு
பாடல் தோற்றுப்போனது
பெண்ணின் புன்னகைக்கு
வார்த்தை அற்று போனது
பெண் அவளின் பார்வைக்கு
அவள்
பேச்சை கேட்கவே
என் உயிர் அது ஓடுது
அவள் மூச்சுப்பட்டாலே
சிறு மொட்டும் மலருது

அழகானது காகிதமும்
பெண்ணை பற்றி எழுதிவைத்தால்
இதமாகுது இம்சைகளும்
பெண்ணே தினம் தாங்கிப்பிடித்தால்

அடடா
அலையும் கரைசேர மறுக்கிறது
பெண்ணின் பாதம் தொடுகையிலே
ஐய்யோ
இந்தக் கவிதையும் வெட்கப்படுகிறது

பெண்ணை பற்றி எழுதையிலே..

           சௌந்தர்யா

No comments:

Post a Comment