ஆடல் தோற்றுப்போனது
பெண் கூந்தல் அசைவிற்க்கு
பாடல் தோற்றுப்போனது
பெண்ணின் புன்னகைக்கு
வார்த்தை அற்று போனது
பெண் அவளின் பார்வைக்கு
அவள்
பேச்சை கேட்கவே
என் உயிர் அது ஓடுது
அவள் மூச்சுப்பட்டாலே
சிறு மொட்டும் மலருது
அழகானது காகிதமும்
பெண்ணை பற்றி எழுதிவைத்தால்
இதமாகுது இம்சைகளும்
பெண்ணே தினம் தாங்கிப்பிடித்தால்
அடடா
அலையும் கரைசேர மறுக்கிறது
பெண்ணின் பாதம் தொடுகையிலே
ஐய்யோ
இந்தக் கவிதையும் வெட்கப்படுகிறது
பெண்ணை பற்றி எழுதையிலே..
சௌந்தர்யா

No comments:
Post a Comment