விழி இல்லை
வழி உண்டு
.
.
.
சூரிய ஒளியை பார்த்ததில்லை
நிலவின் அழகை ரசித்ததில்லை
கருவில் இருந்து வெளிவந்தும்
பகலிலும் நான் இரவையே கண்டேன்
சோதனை கண்டதுண்டு
சோகங்கள் கண்டதுண்டு
பட்டினி கண்டதுண்டு
பதற்றம் கண்டதுண்டு
வன்மம் கண்டதுண்டு
வலிகள் கண்டதுண்டு
கண்டதில்லை
வானம் எதுவென
கண்டதில்லை
பூமி எதுவென
கண்டதில்லை
விளையும் பயிர்கள்
விருட்சப்பூக்கள்
விண்மீன் ஒளிகள்
இப்படி இன்னும் பல பல
கற்பனையின் பல ஓவியங்கள்
கண்முன்னே இருக்கிறது
கனவினிலே பல கலைகள்
காத்துதினம் கிடக்கிறது
விளக்கில்லை
விழியும் இல்லை
இருந்தும்
நான் வெற்றி அடைவதில்
ஒரு பொழுதும் ஐயமில்லை
கண் இல்லை என்றாலும்
கனவுகள் இருக்கிறது
பார்க்கவில்லை என்றாலும்
பாதைகள் தெரிகிறது
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment