“முகம் காட்டு முழுமதியே
அதுவே எனக்கு நிம்மதியே”
திசை தொலைத்து நின்றேனே – உன்னை
தினம் தேடி அலைந்தேனே
என் விழிகளுக்கு விருந்திடு
உன் கடை பார்வையாலே ;
என் செவிகளுக்கு தேன்சொட்டு
உன் ஒரிரு வார்த்தையாலே
பேரின்பம் பூக்கட்டும் – அன்பே
சிரிப்பை சற்று சிதறவிடு ;
மோட்சங்கள் கிடைக்கட்டும் – அன்பே
அருகில் வந்து அமர்ந்துவிடு
வார்த்தைகள் இல்லையே
நீ வருகை தந்தாலே ;
வசந்தங்கள் பொங்குமே
என் வாசலில் உன் பாதம் பட்டாலே
தொட்டு தொட்டு நீ பேசினாய்
என் மனதிற்க்குள் பேரலை ;
யாரை பார்த்தாலும் உன் யோசனை
இதுதானோ காட்சிப்பிழை ...
“நீ ஒருவரி பேசிப்பார்
மொழிகளும் வியந்துபோகும் ;
நீ விழிவழி கொஞ்சம் பார்
நிலவொளி தோற்றுப்போகும்”
உள்ளத்தில் மட்டும் இல்லை
என் உயிரின் பாதி நீயானாய் ;
எண்ணத்தில் மட்டும் இல்லை
என் எழுத்தின் முழுவடிவம் நீயானாய்
உன் உறவோடு வாழ விரும்புகிறேன்
ரெண்டில் ஒன்று சொல்லிவிடு ;
பிரிவை மட்டும் தருவதென்றால்
நீயே வந்து கொன்றுவிடு
---
சௌந்தர்யா ---
No comments:
Post a Comment