Saturday, 20 September 2014

இசைக்கென கவி எழுத வந்தேன் – இங்கு
இசையே பலரை ஆளக்கண்டேன்

இருகிய மனமும் இளகிப்போகும்
இசைதன்னை கேட்கையிலே
இயங்கா இதயமும் இயங்கிப்போகும்
இசைவந்து தீண்டையிலே

ராகங்கள் பல உண்டு – அதை
ரசிக்காது யாரிங்கு
தேகங்கள் அதை கண்டு
தேடாது போவதெங்கு



மாயங்கள் இல்லை
மயங்குது விழி இரண்டும்
மந்திரங்கள் இல்லை – கேட்க
துடிக்குது செவி இரண்டும்

ஆடாத கால் இல்லை
கேட்காத செவி இல்லை
பாடாத இதழ் இல்லை
இன்னிசைக்கு எதுதான் எல்லை !!

ஆராத வலியைக்கூட
ஆற்றிவிடும் இந்தக்கலை
தீயான மனதைக்கூட
நனைத்துவிடும் இசையின்மழை ...


                     ---சௌந்தர்யா---

No comments:

Post a Comment