இசைக்கென கவி எழுத வந்தேன் – இங்கு
இசையே பலரை ஆளக்கண்டேன்
இருகிய மனமும் இளகிப்போகும்
இசைதன்னை கேட்கையிலே
இயங்கா இதயமும் இயங்கிப்போகும்
இசைவந்து தீண்டையிலே
ராகங்கள் பல உண்டு – அதை
ரசிக்காது யாரிங்கு
தேகங்கள் அதை கண்டு
தேடாது போவதெங்கு
மாயங்கள் இல்லை
மயங்குது விழி இரண்டும்
மந்திரங்கள் இல்லை – கேட்க
துடிக்குது செவி இரண்டும்
ஆடாத கால் இல்லை
கேட்காத செவி இல்லை
பாடாத இதழ் இல்லை
இன்னிசைக்கு எதுதான் எல்லை !!
ஆராத வலியைக்கூட
ஆற்றிவிடும் இந்தக்கலை
தீயான மனதைக்கூட
நனைத்துவிடும் இசையின்மழை ...
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment