Saturday, 27 September 2014











திருமணம்
.
.
.
ஆறடியில் வளர்ந்த  போதும்
ஆண்மையிலே சிறந்த போதும்
வீரத்தில் விளைந்த போதும்
பாரத்தால் சரிந்த போதும்
மனைவிக்கு செல்ல பிள்ளை
மீசை வைத்த முதல் பிள்ளை

காலந்தோரும் காத்திடுவாள்
காதலித்தே கவர்ந்திடுவாள்
தாய் வீட்டில் இருந்தாலும்
தாரமாக சென்றாலும்
தாலி கட்டி முடித்துவிட்டால்
தன்னையே தாரைவார்த்து தந்திடுவாள்

உலகினிலே உயர்ந்த உறவு
தொப்புல்கொடி மட்டும் அல்ல
கணவனுக்கும் மனைவிக்கும்
பிரித்தாலும் பிரியாத
மாங்கல்யம் ஒன்று என்றும்
இறைவன் படைத்த இயற்க்கையில்
அதிசயிக்க கூடிய உறவு !!!

                ---சௌந்தர்யா---

No comments:

Post a Comment