Sunday, 21 September 2014

மூன்றெழுத்தின் முகவரி
.
.
.
இரசிக்க வைக்கும் கவிதை மூன்றெழுத்து
இரசிப்பை சொல்லும் அழகு மூன்றெழுத்து
தொடர்பை கொடுக்கும் உறவு மூன்றெழுத்து
உயிரை அளிக்கும் மூச்சு மூன்றெழுத்து



தடுத்தாலும் ஓடும் நேரம் மூன்றெழுத்து
தவித்தால் வரும் தாகம் மூன்றெழுத்து
தவிப்பால் வரும் அழுகை மூன்றெழுத்து
தானாய் வரும் அன்பு மூன்றெழுத்து

கேட்க தோன்றும் பாடல் மூன்றெழுத்து
கேட்டால் தொடங்கும் ஆடல் மூன்றெழுத்து
பேசித்தீர்க்கும் இதழ் மூன்றெழுத்து
பேசாதிருக்கும் மௌனம் மூன்றெழுத்து

எட்ட எட்ட போகும் தூரம் மூன்றெழுத்து
எட்டாதிருக்கும் வானம் மூன்றெழுத்து
மழை நனைக்கும் ஈரம் மூன்றெழுத்து
மலர்கள் கொடுக்கும் மணம் மூன்றெழுத்து

ஆத்திரப்படும் கோபம் மூன்றெழுத்து
அதனால் வரும் சோகம் மூன்றெழுத்து
விழுந்தால் வரும் காயம் மூன்றெழுத்து
வியப்பை கொடுக்கும் மாயம் மூன்றெழுத்து

முரண்கள் தரும் பிரிவு மூன்றெழுத்து
தினமும் வரும் செலவு மூன்றெழுத்து
புது உறவு கொடுக்கும் பள்ளி மூன்றெழுத்து
புத்துணர்விக்கும் புகழ் மூன்றெழுத்து


வாழ்வை மாற்றும் காதல் மூன்றெழுத்து
வாழ்க்கை கொடுக்கும் நட்பு மூன்றெழுத்து
அறிவை வளர்க்கும் அப்பா மூன்றெழுத்து
உயிரை கொடுக்கும் அம்மா மூன்றெழுத்து

                              ---சௌந்தர்யா---






No comments:

Post a Comment