Friday, 19 September 2014

எழுதத்தொடங்கிவிட்டேன் அப்பா
.
.
.
உலகில்
எட்டு வைத்த முதல் அடியும்
எழுதபட்ட முதல் வரியும்
உன்னால் தான் தொடங்கியது
உறவில்
தொட்டு சாய்ந்த முதல் மடியும்
தொடுக்கப்பட்ட முதல் கவியும்
உன்னைத்தான் தழுவியது !!!

அலாதிப்பிரியம் கொடுத்தாய் நீ – என்னை
அழாமல் அன்பால் தடுத்தாய் நீ
அகிலம் போற்ற வளர்த்தாய் நீ
அணைப்பில் எனக்கு முதல்தாய் நீ

சித்திரை மாத வெயிலானாலும்
நிழலாய் என்னை நீ தொடர்வாய்
மார்கழி மாத பனி ஆனாலும்
அணலாய் வந்து சுகம் தருவாய்

நான்
தடம் பதிக்க துடிப்பவன் நீ
தடுக்கி விழுந்தால் தவிப்பவன் நீ
தாயாய் என்னை காப்பவன் நீ – என்னை
தாலாட்டவே உலகில் பிறந்தவன் நீ !!

நெஞ்சில் சுமந்தே உறங்கவைப்பாய்
கையை பிடித்தே வளர்த்துவிட்டாய்
இல்லை என்பதே இல்லாமல் போகும்
இவ்வுலகில் நீ இருக்கும் வரை

மணவாழ்வு வேண்டாம் அப்பா
உன்னுடனே என்றும் இருக்கின்றேன்
மருமகள் பட்டம் வேண்டாம் அப்பா
மீண்டும் மழலையாகவே மாற விரும்புகிறேன்

தோழன் போல நீ இருக்க – உன்
தோல் சாய்ந்தே நான் இருக்க – என்றும்
தொல்லைகள் அன்றி வாழ்ந்திருக்க – ஏழ்
பிறவியிலும் உன் உறவாகவே நான்பிறக்க

நித்தமெல்லாம் என் பெயரை
நீ உறைத்தே வாழ்ந்திருந்தாய்
உன் மொத்தமெல்லாம் எனக்கென்றே
நீ உழைத்தே வாழ்வளித்தாய்
சித்தமெல்லாம் துடிக்குதப்பா – உனை
பிரிந்து போகையிலே
நம் வருத்தமெல்லாம் வழியுதப்பா – விழும்
கண்ணீர் துளிகலிலே !!!

                     அன்புடன்
                           ---சௌந்தர்யா---


No comments:

Post a Comment