Saturday, 13 September 2014

எழுத்துக்குள் ஒழிந்திருக்கும்
என் ஏகபட்ட எண்ணங்கள்                                              
எழுதவில்லை செதுக்குகிறேன்
இது இதயத்தின் தேடல்கள்

மறவாத மனிதனுக்குள்
என்னென்ன ஆசைகள்
மறைந்திருக்கும் மனதுக்குள்
நினைவுகளே இம்சைகள்

பிறப்பொன்று கண்டுவிட்டேன்
பிறந்தே இவ்வுலகினிலே
இறப்பின்வலி கண்டுவிட்டேன்
பல எதார்த்த சாவினிலே

வானத்தின் அழகுதனை
வானவில்லே கூட்டுதிங்கு
வானவில்லின் அழகுதனை
வண்ணங்களே மாற்றுதிங்கு


தினந்தோரும் சாலையில்
கானலையே காண்கின்றோம்
முழுநேர வேலையாய்
இணையதளத்தில் இணைகின்றோம்

கஷ்டங்கள் இஷ்டமில்லை – இங்கு
இஷ்டமெல்லாம் கஷ்டமில்லை
மாற்றங்கள் மாறுவதில்லை – இங்கு
மாறாதது எதுவுமில்லை

கால்தொட்டு கெஞ்சினாலும்
கடலோடு செல்வதில்லை கால்இரண்டும்
விரல்தொட்டு கொஞ்சினாலும்
வீணையோடே நிலைப்பதில்லை கையிரெண்டும்

எழாமலே உறங்குகின்றேன் – இன்னும்
என் கனவுகளே முடியவில்லை
எதார்த்தமாய் எழுதிவிட்டேன் - இங்கு
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை

                                                --- சௌந்தர்யா ---


No comments:

Post a Comment