Sunday, 21 June 2015

வலி மட்டும் கண்டதனால் வலிமையானது வாழ்க்கை!
.
.
.
இடம் மாறிய இதயம்
திரும்பி வர மறுக்கிறது
ஏன் இந்த கொடுமை
மனம் தடுமாறி துடிக்கிறது

வலிகளிலே கொடிய வலி
உனை பிரிவேன் எனத் தெரிந்தும்
பிடிக்கிறது இன்னும் இன்னும் L

தொட்டுப் பழக வேண்டாம்
தொடர்ந்து வந்தால் அது போதும்
விட்டு விலக வேண்டாம் உன்
அருகாமை  நிலைத்தால் அது போதும்

நீ என்று சொன்னேன்
ஏதும் இங்கு அர்ப்பமானது
நான் என்ற சொல்லில்
உந்தன் நினைவு கலந்துபோனது

மாண்ட உயிர் வாராது      - இது
மனிதன் வாழ்வின் இறுதிநிலை
நீயன்றி
வாழும்  நாட்கள் நகராது – இது
கண்ணை மறைக்கும் காட்சிப்பிழை

அலை கடல் தாண்டி நீ வாழ - உன்
அறைகன பிரிவும் எனை கொள்ள
விடியற்க்காலை அந்தி மாலை
நேரம் காலம் காதலுக்கில்லை

உன்னோடு வாழ்நாள் தொடர்ந்தால்
நிச்சயம் சிரிப்பின் சித்திரம் நானாவேன்
என்னோடு உன் பயணம் கடந்தால்
உன் மன ஓரம் சென்று பத்திரமாவேன்!

குரல் மட்டும் கேட்டாலே
குறை தீர்ந்து போகிறது – உன்
விழி தொட்ட என் தேகம்
இன்னும் அங்கேயே நிற்கிறது

நான் தெரிந்தே இழக்கும் இந்த நல்வாழ்வு
தெரியாமலே போகட்டும் எவருக்கும் !

இறைவன் வரம் கேட்பதுண்டாம்
கதைகளிலே படித்ததுண்டு
அப்படி அவன் கேட்க வந்தால்
சுதந்திரமான வாழ்வு கேட்பேன்
அதில் உன்னோடு  நான் வாழக் கேட்பேன் !

தடுப்பதற்க்கு ஆள் வேண்டாம்
தனிக்காட்டில் ஓர் இடம் போதும்
தவித்தால் கூட நீர் வேண்டாம்- என்
தாகம் தீர்க்க நீ போதும் !


                                -சௌந்தர்யா-
இடஞ்சல்களுக்கு இடைவெளி
.
.
.
இத்தருண வெளிப்பாடாய் 
இதை மட்டும் எழுதுகிறேன்
இனம்புரியா இடர்பாடாய்
இன்னல்களுக்கு ஏங்குகிறேன்
வலிக்கும் என தெரிந்தும்
வாலிபக்காதல் விடுவதில்லை
வறுத்தம் பல இருந்தும்
வாழ்க்கை நின்று போவதில்லை
புரியாததை விளக்க முற்படு
விலக முற்படாதே
பிடிக்காததை தவிர்க்க முற்படு
தகர்க்க முற்படாதே
கற்றோரிடம் கற்றிட வேண்டும்
உற்றோருக்கு உதவிட வேண்டும்
பெற்றோரை என்றும் மதித்திட வேண்டும்
மற்றோரையும் சற்றே புரிந்திட வேண்டும்
வரவு செலவு கணக்கை போல
ஏற்றமும் இறக்கமும் தேடி வர
இன்ப துன்ப அலை போல
அடிப்பதும் அனைப்பதும் மாறி வர
எத்திக்கு சென்றாலும்
துரத்தும் காற்று தொட்டே தீரும்
எந்தப்பக்கம் போனாலும்
எதிலும் காயங்கள் என்பது வந்தே போகும் !
வேண்டுவது இங்கே ஏதுமில்லை
வேண்டாம் இங்கே பலவீனம் மட்டும்
வேண்டாமென்பதற்க்கு ஏதுமில்லை
வேண்டும் இங்கே மனபலம் மட்டும் !!!
வாரித்தர அன்பை தவிர
வேறெதுவும் இல்லை என்று
எவரும் இதை உணர்ந்தாலே
வாழ்வில் வருத்தம் என்பதே கிடையாதே!
- சௌந்தர்யா -

Sunday, 7 June 2015

சின்ன சின்ன சிரிப்பலைகள்
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே

நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்

வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே

வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்

வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது

வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்

உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய்  நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன

கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்

முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே

விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே

பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ... 

Sunday, 3 May 2015

வாழ்வா................. இதில் வாழ வா.............
.
.
.
வாழ்க்கையறியேன் நான்
வாழ்வும் அறியேன் நான்
வானம் அறியேன் நான்
வண்ணம் அறியேன் நான்

ஒரு பிறவிக்குள் பல பிறவி
ஒரு பிறப்புக்குள் பல பிறப்பு
ஒன்றியது ஒன்றுமல்ல
மிச்சமிங்கு அடிகள் மட்டும்....

ஆழத்தெரிந்தவன் அழமாட்டான்
அழுகிறவன் எழமாட்டான்
அன்பென்ற ஒன்றை கூட
ஆணையிட்டால் எவனும் தரமட்டான்

இரவில் வரும் இருட்டு
முடியாவிட்டால் ஏது பகல்
பகலில் வந்த வெளிச்சம்
மறையாதிருந்தால் ஏது இருள்

நேரம் கடக்குது விரைவாக
நாட்கள் நகருது அலை போல
அடிக்கடி சோகம் சூழ்ந்தாலும்
அன்பில் வாழுது நம் ஜீவன்

உலகின் மிகக்கொடிய  நோய்களிலே
வறுமை என்பது முதலிடமே
மனதின் மிகப்பெரிய வலிகளிலே
மௌனம் என்பது மாறாததே

எது வலி தந்தாலும்
எது வந்து போனாலும்
அழுகும் நொடி வருந்தாதே
பத்து முறை அழுவதிலே
ஒரு அனுபவம் அடங்கிப்போகும்!


வரவேற்ப்பது மனித இயல்பு -
எதுவென்றாலும்
வரவேற்க்கிறான் மனிதன்
வலி ஒன்றை தவிர......

வேடிக்கையான இந்த உலகில்
மதச்சண்டை இடும் ஒரு ஜாதி
அதுவே எழுதப்பட்ட ஒரே விதி.........

மரக்கிளை போல
ஒட்டியே ஒரு உறவிருக்குமென்றால்
கண்ணீரும் காயமும் கூட இனி
வரவேற்க்கப்படுகிறது ......

இனிமைகள் பல
இழப்புகள் பல
முடியாது இது  சொல்ல சொல்ல

மாற்றம் மாற்றம் மாற்றமே
இதுதான் மனித வாழ்வா
மாறி மாறி மாறி
நீயும் அதிலே வாழ வா............................

-    சௌந்தர்யா -















Saturday, 2 May 2015

என்னில் நீ
.
.
.
நீ மட்டும் போதும்
என் ஜீவன் வாழும்
நீ இல்லா நேரம்
மனமெங்கும் பாரம்

உன்னை இங்கு தாங்கியே
உன்னில் என்னை தொலைத்தேனே
என்னை நானும் தேடியே
எதிலும் உனையே அறிந்தேனே

எப்படி என்னுள் நீ வந்தாய்
அறியாத பேதை நான்
உன்னை பற்றி வரலாறே
எழுதச் சொன்னால் மேதை நான்

சத்தம் போட்டு அழுதிடுவேன்
சங்கடம் போக்க நீ வந்தால்
நித்தம் எல்லாம் உறங்கிடுவேன்
சாய்வது உன் தோல் என்றால்
நேரில் உன்னை பார்க்காவிடிலும்
நேரம் உனக்கே அர்ப்பனமே
நீ என்னை தூக்கி எரிந்தாலும்
என் அன்பு உனக்கே சமர்பனமே


கவிதை எழுத ஆசைபட்டேன்
காகிதங்கள் தந்தாய் நீ
இசை தொடுக்க ஆசைபட்டேன்
திசையெங்கும் கருவிகள் அமைத்தாய் நீ
ஓவியம் தீட்ட ஆசைபட்டேன்
வண்ணங்கள் பரிசாய் கொடுத்தாய் நீ
வானவில் கண்டு ஆசைபட்டேன்
வானமே அள்ளிக்கையில் தந்தாய் நீ............

எதை இங்கு கொடுத்தாலும்
ஏக்கமின்றி ஏற்றிடுவேன்
மௌனம் மட்டும் வேண்டாமே
நான்
உறக்கமன்றி போய்விடுவேன்



பேசிவிடு பேசிவிடு
அந்த பேச்சில் இருக்குது பாதி உயிர்
உறவுகொடு உறவுகொடு
உன் உறவில் வாழுது என் மீதி உயிர்

-    சௌந்தர்யா -






Thursday, 30 April 2015












இசை ஒன்றே ஆனாலும்
ரசனைகள் வேறு
உடல் ஒன்றே ஆனாலும்
உயிர்கள் வேறு
வழி ஒன்றே ஆனாலும்
பாதங்கள் வேறு
விழி ஒன்றே ஆனாலும்
பார்வைகள் வேறு

அழகென்று பார்த்தேன் நான்
பார்ப்பதெல்லாம் அழகாக்கினாய் நீ

சின்ன சின்ன புகைபடத்தில்
வண்ணம் பல காட்டிவிட்டாய்.....

அந்தச் செடி கொடிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை
இயற்க்கையில் நாமும் இப்படி ஒரு அழகென்று..

அடிக்கடி கடக்கும் யாரும்
அடிக்கடி நடக்கும் யாரும்
நின்று ரசித்திருக்க வாய்ப்பில்லை
என்றபோதும் சற்றே நின்று
ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தாய்
உன் புகைபடத்தில்.......

இனி ஒரு சிறு நொடி
உன் பார்வையில் பிறர் விழி
ரசித்துப் போகட்டும்..........

-    சௌந்தர்யா -






Monday, 27 April 2015

கண்மனியே
உன் விழிப்பார்வையில் வலியறியேன்
நீ இருந்தாலே இங்கு எனை உணர்வேன்..

நீ கட்டிப்போட்ட கடைபார்வையில்
இன்னும் ஒட்டிகிடக்கின்றேன் நான்

பைங்கிளி  உன் பேச்சை கேட்க
நான் பைத்தியமாய் அலைகின்றேன்
ஒரு சிரு வரி நீ பேசினாலே
நான் உன்னுள் ஐக்கியமாய் ஆகின்றேன்

தங்கத்தாரகை உன் தோளில்
சாய்ந்திருந்தால் சாவும் வரமே
வைரமணி உன் மடியில்
உறக்கம்கொடுத்தால் போதும் வாழ்வே

சுற்றி சுற்றி யோசித்தாலும்
சுற்றும் காற்று தேவையில்லை
அன்பே
உன்னால் வாழும் என் ஜீவன்
உனை அன்றி போனால் உயிர் துறக்கும்...




Sunday, 26 April 2015

புரியும் நொடியில் பிரியும் கனமே
.
.
.
புரியும் நொடியில் பிரியும் கனமே
நீ பிரிந்தால் இங்கு வரமும் வலியே....

சின்ன சின்ன சண்டைகளில் – இதயம்
சின்னா பின்னம் ஆகிப்போக
உன் சிங்கார சிரிப்பில் மட்டும் அது
அழகாய் வந்து தங்கிப்போக

மௌனம் என்பது மரண அடி
அதை மறக்காமல் நீயும் தந்தாயடி
மலர்கள் போன்றது உனது மடி
அதை கொடுக்காமல் ஏன் விலகி சென்றாயடி

அனுபவங்கள் இருந்தாலும்
அனுபவிக்கிறேன் நான் ஏனோ 
அறை நொடி நீ பிரிந்தாலும்
பரிதவிக்கிறேன் இது நான்தானோ

பேசி பேசி தீர்க்க வேண்டாம்
பக்கம் வந்து நில் போதும்
பார்த்து கொண்டே இருக்க வேண்டாம்
பாசம் தந்தால் அது போதும்

எங்கே எந்தன் புன்னகை
எங்கே எந்தன் பூரிப்பு
எங்கே எந்தன் வாழ்க்கை
எங்கே எந்தன் இதயம்
எங்கே எந்தன் நிம்மதி
இவையெல்லாம்
உன்னிடத்தில் வாழுது பாரடி
நீ நிலைத்தால் நிற்கும் நில்லடி..

என்ன சுகம் தரவில்லை
என்னை விட்டு செல்கின்றாய்
என்ன தொல்லை நான் தந்தேன்
என்னை விலக்கி வைக்கின்றாய் ..

சஞ்சலங்கள் இருக்காது
சங்கடங்கள் வாராது
உனக்கு
தொல்லைகள் என்னால் தொடராது
பெண்ணே நீயே கொன்றுவிடு
உன்
பாதத்தடியில் மண்ணாயேனும் வாழுகிறேன் ...


----------- சௌந்தர்யா--------------

Wednesday, 4 February 2015

என்னில் ஒரு அகராதி
.
.
.
வசப்பட்ட வாழ்க்கையின்
வசந்தங்கள் நீயடி
வதைக்கின்ற இதயத்தின்
வைத்தியங்கள் நீயடி
அன்பென்ற மழைதன்னில்
அரியசுகம் நீயடி
அதைபோன்று ஏதுமிங்கு – நான்
விரும்பவில்லை ஏனடி ?

சிக்கிக்கொண்டாய் நீ மட்டும்
என்
வார்த்தையிலும்
வாழ்க்கையிலும்..
இருந்தும்
சிறைவாசம் உனக்கில்லை
எனக்கே அது தொடர்கிறது

தூர எறி
தூக்கி எறி
வறுத்திவிடு
வெறுத்துவிடு
பயமில்லை எனக்கொன்றும்
பயனில்லை அதற்கொன்றும்

உன் துணையில் இல்லாவிடிலும்
உன் நினைவில் வாழ்ந்திடுவேன்

ஏற்க முடியாது
தரவும் முடியாது
வியாதி ஒன்று உன்னை சூழ்ந்திருக்கிறது !
பரவி விடுமோ என
விரட்டுகிறாய் என்னை நீ !
பரவாவிடிலும்
நீ ஒதுக்கிவிட்டால் நான்
மாய்வது நிச்சயம் !!

தாங்கி பிடிக்க ஆள்
இல்லாத போதில்தான்
கஷ்டங்கள் பேரிடறாய்
உருவெடுக்கிறது !


பருவக்காற்று சுகம் என்பதையும்
பங்குனிவெயில் சுடும் என்பதையும்
மறுக்க முடியாது
மாற்ற முடியாது
அதுபோலத்தான் வாழ்க்கையில்
உன் வரவும் பிரிவும்
தடுக்க முடியாது
தவிர்க்கவும் முடியாது !

பிரிந்திருக்க இருவேறு உயிர் அல்ல நீ
என் உயிரின் ஒரு பாதி நீ !!!


---சௌந்தர்யா---