இசை ஒன்றே ஆனாலும்
ரசனைகள் வேறு
உடல் ஒன்றே ஆனாலும்
உயிர்கள் வேறு
வழி ஒன்றே ஆனாலும்
பாதங்கள் வேறு
விழி ஒன்றே ஆனாலும்
பார்வைகள் வேறு
அழகென்று பார்த்தேன் நான்
பார்ப்பதெல்லாம் அழகாக்கினாய் நீ
சின்ன சின்ன புகைபடத்தில்
வண்ணம் பல காட்டிவிட்டாய்.....
அந்தச் செடி கொடிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை
இயற்க்கையில் நாமும் இப்படி ஒரு அழகென்று..
அடிக்கடி கடக்கும் யாரும்
அடிக்கடி நடக்கும் யாரும்
நின்று ரசித்திருக்க வாய்ப்பில்லை
என்றபோதும் சற்றே நின்று
ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தாய்
உன் புகைபடத்தில்.......
இனி ஒரு சிறு நொடி
உன் பார்வையில் பிறர் விழி
ரசித்துப் போகட்டும்..........
-
சௌந்தர்யா -
No comments:
Post a Comment