Sunday, 21 June 2015

இடஞ்சல்களுக்கு இடைவெளி
.
.
.
இத்தருண வெளிப்பாடாய் 
இதை மட்டும் எழுதுகிறேன்
இனம்புரியா இடர்பாடாய்
இன்னல்களுக்கு ஏங்குகிறேன்
வலிக்கும் என தெரிந்தும்
வாலிபக்காதல் விடுவதில்லை
வறுத்தம் பல இருந்தும்
வாழ்க்கை நின்று போவதில்லை
புரியாததை விளக்க முற்படு
விலக முற்படாதே
பிடிக்காததை தவிர்க்க முற்படு
தகர்க்க முற்படாதே
கற்றோரிடம் கற்றிட வேண்டும்
உற்றோருக்கு உதவிட வேண்டும்
பெற்றோரை என்றும் மதித்திட வேண்டும்
மற்றோரையும் சற்றே புரிந்திட வேண்டும்
வரவு செலவு கணக்கை போல
ஏற்றமும் இறக்கமும் தேடி வர
இன்ப துன்ப அலை போல
அடிப்பதும் அனைப்பதும் மாறி வர
எத்திக்கு சென்றாலும்
துரத்தும் காற்று தொட்டே தீரும்
எந்தப்பக்கம் போனாலும்
எதிலும் காயங்கள் என்பது வந்தே போகும் !
வேண்டுவது இங்கே ஏதுமில்லை
வேண்டாம் இங்கே பலவீனம் மட்டும்
வேண்டாமென்பதற்க்கு ஏதுமில்லை
வேண்டும் இங்கே மனபலம் மட்டும் !!!
வாரித்தர அன்பை தவிர
வேறெதுவும் இல்லை என்று
எவரும் இதை உணர்ந்தாலே
வாழ்வில் வருத்தம் என்பதே கிடையாதே!
- சௌந்தர்யா -

No comments:

Post a Comment