வழக்கமாய் வரும் நிலா
வழிமாறிபோகுமா
உறக்கத்தில் வரும் கனா
எழுந்ததும் தொடருமா
எதிர்பார்ப்புகள் நடக்காது
ஏளனங்கள் குறையாது
எதார்த்தமாய் செய்தாலும்
எதிர்பேச்சு முடியாது
ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஒரு மிருகம் இருக்கிறதாம்
ஒவ்வொரு மனதினுள்ளும்
பல வலிகள் தொடர்கிறதாம்
போதும் என்று சொல்வதில்லை
உணவை தவிர ஒன்றையுமே
வேண்டாம் என்று சொல்வதில்லை
வருத்தம் தவிர ஒன்றையுமே
உலகில்
நிம்மதி ஆன வாழ்க்கை வாழ
ஊமை ஆக இருக்க வேண்டும்
சங்கடம் இல்லா வாழ்க்கை வாழ
செவிடகத்தான் பிறக்க வேண்டும்
சொல்வதையும்
கேட்பதையும்
இனி சொப்பனத்தில் தான் காண வேண்டும்
அழுகையும் நல்லதுதான்
அனுபவம் கிடைப்பதாலே
கவலையும் நல்லதுதான் - தினம்
கவிதைகள் பிறப்பதாலே .
--- சௌந்தர்யா ---
No comments:
Post a Comment