Thursday, 14 August 2014

உச்சகட்ட அழுகை
பேச வரிகள் இல்லை

எச்சில் விழுங்க வழியில்லை
நெஞ்சில் மிச்சம் இங்கு எதுவுமில்லை

பிரிய மனம் இல்லை எனக்கு – இருந்தும்
வீட்டுப்படி தாண்டுகிறேன்

பெரிய கனம் மனதில் இருக்கு – அதனால்
புரியாமல் பேசித்திணருகிறேன்

அடித்திருக்கிறாள் அம்மா
அழுது அமைதி அடைந்ததுண்டு
திட்டி இருக்கிறாள் அம்மா
எரிந்துப்பேசி எதிர்த்ததுண்டு

வாங்கி வாங்கி பழக்கபட்டவள் நான்
வார்த்தைவலிகள் புதிதில்லை
வாசம் இல்லாத மலரும் நான்
எவரும் பரித்துப்போக வழியில்லை



கண்ணீர் தீர்ந்தது கண்களிலே - என்
காயங்கள் தீருமா இதயத்திலே..???

தெரியவில்லை எனக்குமிங்கே
தெரியாதது வாழ்க்கைப்படி ?
புரியவில்லை ஒன்றுமிங்கே
எல்லாம் இங்கு கேள்விக்குறி ???

                     சௌந்தர்யா



                    








No comments:

Post a Comment