உச்சகட்ட அழுகை
பேச வரிகள் இல்லை
எச்சில் விழுங்க வழியில்லை
நெஞ்சில் மிச்சம் இங்கு எதுவுமில்லை
பிரிய மனம் இல்லை எனக்கு – இருந்தும்
வீட்டுப்படி தாண்டுகிறேன்
பெரிய கனம் மனதில் இருக்கு – அதனால்
புரியாமல் பேசித்திணருகிறேன்
அடித்திருக்கிறாள் அம்மா
அழுது அமைதி அடைந்ததுண்டு
திட்டி இருக்கிறாள் அம்மா
எரிந்துப்பேசி எதிர்த்ததுண்டு
வாங்கி வாங்கி பழக்கபட்டவள் நான்
வார்த்தைவலிகள் புதிதில்லை
வாசம் இல்லாத மலரும் நான்
எவரும் பரித்துப்போக வழியில்லை
கண்ணீர் தீர்ந்தது கண்களிலே - என்
காயங்கள் தீருமா இதயத்திலே..???
தெரியவில்லை எனக்குமிங்கே
தெரியாதது வாழ்க்கைப்படி ?
புரியவில்லை ஒன்றுமிங்கே
எல்லாம் இங்கு கேள்விக்குறி ???
சௌந்தர்யா
No comments:
Post a Comment