Tuesday, 19 August 2014

கனிந்தொரு நாளில்
கடிந்தொரு வார்த்தை

கலங்கிய கண்ணில்
காயங்களின் சர்ச்சை

புரியவில்லை மனிதனின் மாற்றம்
தெரியவில்லை அப்பரிமாற்றம்

நீ தேடும் தேடல்கள்  நிஜமாகவில்லை
உன்னை தேடி வருவதெல்லம் பொய்யானதில்லை

சுடுகிறது நெஞ்சம்
நிழல் பட்ட பின்னும்
தேடுதே உள்ளம்
உறவு பொய்யென்று தெரிந்தும்

நீல வண்ணமேகங்கள் ஊர்ந்து போகுதொரு உலா
அதை கவியாய் எழுதி கானுகிறேன் நானும் கனா

எடுத்தெரியவில்லை ஏக்கங்கள் எனக்கு
எட்டாத நிலவுக்கு ஏணிப்படி எதற்க்கு


எதார்த்தமாக இருக்கவில்லை இங்கு
எதிர்ப்பார்ப்புகள் பெரிய தொல்லை
எண்ணிக்கை தெரியவில்லை எங்கும்
ஏக்கங்கள் நம்மை விடவில்லை

அந்திபகல் வேலையிலே
சூரியன் உதிக்கக்கண்டேன்
அத்துவான காட்டுக்குள்
சூராவளி அடிக்கக்கண்டேன்

மனம் இன்று சிரிக்கிறது
மழலை மொழி கேட்டாலே
மலர் கூட அழுகிறது அந்த
மயானக் கறையினிலே

அடித்தாலும் வலிக்கவில்லை
மழை அடிக்கும் வேலையிலே
அனைத்தாலும் சுகமில்லை
மனம் விரக்தி அடைந்தாலே..

ஆயுள் கைதி ஆனதனால்
தண்டனைகள் பெரிதில்லை
அலையில்லா கடலுக்கு
பேரலைகள் வருவதில்லை

புரலிகளே இருக்காது
உறவுகளை குறைத்தாலே
வலிகளே வாராது
வருவதை ஏற்றாலே

-- சௌந்தர்யா --


No comments:

Post a Comment