Friday, 6 May 2016

இதுவரை  நான் காணா அறிய சுகங்கள்
நீ தந்து நான் காண்பது சுவையிலும் சுவையே !

கடைவிழி பார்வையில்
எங்கோ கொண்டு போனாய்
உன் ஒருவிரல் தீண்டலில்
உயிரை கொன்று போனாய்

எத்துனை நாட்கள் கடந்தாலும்
உன் போல் ஒருவன் கிடைக்காது
என்னென்ன இன்பம் வந்தாலும்
நீ கொடுக்கும் விதம் போல் அமையாது

தாகம் தீர்த்தாய்
பேச்சினிலே
என் சோகம் தீர்த்தாய்
விழிவாள் வீச்சினிலே
புது மோகம் பெருகுது
உன் மூச்சினிலே
இனி  இரு உடலும்
ஒரு உயிரின் ஆட்சியிலே !

பெயரில்
ஆறெழுத்து மந்திரம்  நீ
ஐம்பெரும் காப்பியம் நான்
இணைந்து போன இலக்கியம் நாம்

மொழிகள்   நீ
வரிகள்  நான்
அதில் பினைந்து போன காவியம் நாம்.......
                                                     
கண்டதும் காதல்
காணக் காண காதல்
சொன்னதும் காதல்
சொல்லாத காதல்
உன்னதக் காதல்
உயிரோடொன்றிய காதல்

எழுத எழுத காதலில் தான் எத்துனை
வடிவம் உள்ளதடா
இங்கு காதல் ஒன்று மட்டும்தான்

கவிதையின் முழு உருவமடா ! ! !

No comments:

Post a Comment