Friday, 6 May 2016

இன்றொரு நாள்
.
.
.
எனக்கென்று இருப்பது எதுவும்
இன்று உனக்கென்று ஆன பின்
உனக்கென்ன வேண்டும் அன்பே
நமக்கென்று காதல் போதும்

மௌனப் பாதை உனதானது
வார்த்தை ஜாலம் எனதானது
மாறி மாறி இருவரும் இங்கு
மாற்றம் கண்டு வாழ்வோமே

தீ என நீ எனை சுட்டதில்லை
தேன் சுவை நீ என்றும் எனக்கு திகட்டியதில்லை
பால் மனம் போகா பச்சை பிள்ளை
உன்
உள்ளத்தில் என்றும் கள்ளம் இல்லை

உன்னை போல் யாரும் இங்கு
என்னை அறவனைக்க முடியாது
 உன் உதவும் கரத்தை போல
அந்த கடவுளுக்கும் கிடையாது
நீ மட்டும்
 நீ மட்டும்
அது எனக்கு தெரிந்த ஒரு வேதம்
உனை மட்டும்
உனை மட்டும்
சுத்திடும் என் அன்பு அதிவேகம்     

கடிகாரம் வேண்டாமே
கனப்பொழுதில் எல்லாம் நீ போதும்
பிரிவினைகள் வேண்டாமே
கண் உறங்கும் போதும்  நீ வேண்டும்

 நீ பாதி
நான் பாதி
வாழ்க்கை இருவருக்கும் சரிபாதி

உலகம் சுற்றி பார்க்க உனக்கு ஆசை
என் உலகமாய் எனக்கு உன்னை சுற்றிட ஆசை
அழகாய் இருக்க உனக்கு ஆசை
உன் அன்பை மட்டுமே அழகாய் பார்ப்பது எனது ஆசை

வரம் இல்லை
வரவில்லை
துணை இல்லை
இணை இல்லை
எத்துனை லோகம் சென்றினுமே
இப்படி ஒருவன் கண்டதில்லை
சத்தியம் நான் செய்திடுவேன்
நீ கணவன் அல்ல கடவுள் என….





No comments:

Post a Comment