Sunday, 7 June 2015

சின்ன சின்ன சிரிப்பலைகள்
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே

நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்

வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே

வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்

வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது

வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்

உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய்  நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன

கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்

முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே

விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே

பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ... 

4 comments:

  1. தங்கள் பகிர்வுக்கு நன்றி

    thanku
    ramu

    ReplyDelete
  2. அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி...
    Joshva

    ReplyDelete
  3. KATTIKKONDU VAAZHVOM
    OR
    OTTIKKONDU UYIR PIRIVOM....SUPER...

    ReplyDelete