அடிகள் இல்லா வலிகள் இது
அவனுக்கான கவிதை இது
.
.
.
எங்கெங்கே தேடுவது
எப்பொழுது நீ வருவாய்
மனம் ஏங்கி அலைகிறது
அதை என்று நீ அறிவாய்
தொலைபேசி அடிக்கையிலே
உன் அழைபென்றே ஓடுகிறேன்
நீ அன்றி போகையிலே
உனை எண்ணித்தவிக்கின்றேன்
கவிதை வார்க்க வேண்டும் - கண்ணா
ஒருமுறை வந்து பார்த்துவிடு
கவலை குறைய வேண்டும் – அன்பே
ஒருமுறை நின்று பேசிவிடு
உறைந்து கிடக்கும் உள்மனதில்
உருகி வழிகிறாய் நீ
உளர்ந்து கிடக்கும் என் மனவானில்
அடிக்கடி உதயமாகிறாய் நீ !!
ஏக்கம் கொண்ட எனதுள்ளம்
ஏற்றம் கொள்ள வழியில்லையா
தாக்கம் கண்ட என்னையிங்கு
தாங்கிபிடிக்க ஆள் இல்லையா
எத்தனை நாள் ஆனாலும்
எங்கே நான் சென்றாலும்
இன்னும் நினைவில்
முத்தமிட்டுத்தான் போகிறது
முறிந்துபோன அந்த முதல் காதல் !!!
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment