பளிச்சென முகம்காட்டி புன்னகைப்பாள்
வெளிச்சம் கொடுத்து தனித்திருப்பாள்
வட்ட முகம் அவளுக்கு
வர்ணம் இல்லை அவளுக்கு
வெண்மைதான் என்றென்றும்
பெண்மை இல்லை ஆனாலும்
மென்மை மட்டும் கலையாத – நம்
கண்ணை எல்லாம் திரும்பி பார்க்க செய்யும்
திகட்டாது தித்திக்கும்
திங்கள் நிலவு அவள் !!!
சௌந்தர்யா
No comments:
Post a Comment