Thursday, 16 October 2014


























நீண்டதொரு பயணம் – அதில்
நீ மட்டும் வேண்டும்
முன்னும் பின்னும் நதிகள் – அதில்
நனையவேண்டும் நம் கால்கள்

பச்சை வண்ண மரங்கள் – அதில்
வாழும் பறவை கூட்டங்கள்
நிழலின் கீழ் நான் இருக்க
என் மடியில் நீ தலை சாய்த்திருக்க

பயிர்கள் எல்லாம் செழித்தது – உன்
பாதம் பட்டதாலோ – என்
உயிரும் கூட வாழ்வது – உன்
தேகத் தீண்டலாலோ             

அழகான உன்னை நான் – என்
கவிதைக்குள் ஒழித்துவைத்தேன்
அளவிலாது அதை படித்தே – என்
ஆயுள்தனை நான் கடப்பேன்

வின்மீண்கள் பல கோடி – நீ
நிலவடி என் தோழி
அழகிற்கு அகராதி – உனக்கு
எழுதுவேன் பல அந்தாதி

வான்மேகம் வருகிறது – உன்
வார்த்தைகளை கேட்கத்தான்
வானவில்லும் வருகிறது – உன்
வண்ணங்களை கேட்டுத்தான்

அதிசயத்தில் ஒன்றல்ல – இருந்தும்
அதிசயபிறவி நீயடி
அலங்காரம் ஏதுமல்ல – இருந்தும்
 நீ அறுபதிலும் அழகியடி

நீ விழிமூடி திறக்கும்போதே
பகல் இரவை நான் உணர்ந்தேன்
நீ கதைபேசி சிரிக்கும்போதே
இன்னிசையை நேரில் நான் கண்டேன்

பேரழகி நீ இருந்தால்
பேரின்பம் தானாய் வரும்
உலகழகி பட்டம் எல்லாம்
உனக்கு தானாய் தேடி வரும்

அன்னாந்து பார்க்காதே
சூரியனில் மழை அடிக்கும்
மண்ணை பார்த்து நடக்காதே
பூமிக்கும் உனை பிடித்துவிடும்

உன் காட்டருவி குழலாலே
கட்டி இழுத்து செல்வதேனோ
உன் தேன்சொட்டும் குரலாலே
எனை மயக்கி போவதேனோ

இச்சகம் எல்லம் போற்றும்படி
எப்பவும் நான் எழுதி எழுதி
புத்தகவிரும்பி உனக்கு நான்
ஒரு நூலகமே  பரிசளிப்பேன்

கோவில்கள் இங்கு பெரிதில்லை
அதைவிட புனிதமானவள்  நீயன்றோ
கடவுளும் இங்கு உயர்வில்லை
அதையும் தாண்டிய நீ தெய்வீக பெண்னன்றோ

எதுவும் உனக்கு கொடுத்ததில்லை
எதையும் நீ கேட்டதுமில்லை
இயல்பாய் பெருகிய நம் காதல்
சுட்டாலும் கருகாத வான்மேகங்கள்

என்றென்றும் புன்னகை
அதுவே என் முகவரி
எவர் போற்றி பாடினாலும்
அச்சிரிப்புக்குள் வாழ்வது நீயடி

ஓர்  உயிராய் உலகில் நீயிருக்க
உனையே உலகமாய் நான் நினைக்க

ஒரு பிரசவத்தில் படைக்கபட்டாய் நீ
பல பிரசவங்கள் கொடுத்து உன்
பிரவேசம் முடியாமல்
பக்கங்களில் எழுதியே உனக்கு
ஆயுள் தருகிறேன் நான் !


---சௌந்தர்யா---
ஒடுக்கப்படாது போனதனால்
ஒதுக்கப்பட்ட உயிர் ஒன்று
ஓலமிடும் வரிகள் இது
.
.
நினைத்து நினைத்து சொல்லி அழ
உண்மை சொந்தம் ஒன்றும் இல்லாததால்
நனைத்து நனைத்து எழுதி வைத்தேன்
என் காகிதம் திட்டாது என்பதனால்

சோகம் கேட்ட சொந்தங்கள்
ஒன்றை நான்காய் சொல்லிப்போக
எனை பற்றி தெரியாத மாந்தர்கூட
ஏளனமாய் என்னை நினைத்துப்போக..

என்னிடம் மட்டும் நேரில் பசி
எனை தெரிந்து கொள்ளும்
உறவுகள் போதும் எனக்கு !
காதுபட யாரோ பேச்சை
கேட்டு எனை சித்தரிக்கும்
உறவுகள் வாழ்வில் வேண்டாம் எனக்கு !


ஆணவம் கர்வம் ஆத்திரம் எல்லாம்
படைக்கவடுவதில்லை யாருக்கும்
தேவை ஆசை சேவை போல
வருகிறது ஒவ்வொரு சூழலுக்கும்

சர்ச்சை இல்லை இங்கே - இருந்தும்
இந்த இச்சை வாழ்க்கை பிடிக்கவில்லை
சொல்லிகாட்டி சோறூட்டுவதெல்லாம்
எந்த உடம்பிலும் போய் ஒட்டுவதில்லை

 நல்ல பெயரே எனக்கில்லை – அதனால்
 நடித்து வாழ அவசியமில்லை
 போலியான வாழ்க்கை வாழ விரும்பவில்லை - அதனால்
 பலபல புகழ்பட்டங்கள் எனக்கு தேவையில்லை

அழுகவில்லை இப்போது
அழுகையை கடந்த வலிகள் இது
சிந்திக்கவில்லை இப்போது
எதார்த்தமாய் வந்த வரிகள் இது

சண்டைக்கு வரவேண்டாம் - சத்தியமாக
யாருக்கும் சமர்பிக்கவில்லை இதை
இது எனக்காக நான் எழுதிய ஒருகவிதை...

                     ---சௌந்தர்யா---

Friday, 10 October 2014

























வெளிச்சம் இல்லா இரவு அது
விண்மீன் மட்டுமே ஒளிர்கிறது
தடுமாறிப்போனவன் அவன்
தடம்மாறிப் போவானா ??

நடுக்காட்டில் நிற்கின்றான்
நல்வழிதேடிப் பார்க்கின்றான்
பாதைகள் மட்டுமே தெரிகிறது
பாதை முடியும் இடம் தெரியவில்லை

தீண்ட வரும் காற்று கூட
தீயாய் அவன்கண்ணில் படுகிறது
தொட்டுபோகும் இலைகள் கூட
தொட்டால் முள்ளாய் துளைக்கிறது

ஆவிகளாய் தெரிகிறது
விழுதுகள் யாவும் இவ்விடத்தில்
ஆண்மாவாய் அலைகிறது
ஆசைகள் கொண்டு ஓரிடத்தில்

கையை பிணைந்து
கால்கள் நடுங்க
உடலே நணைந்து
உள்ளம் அழுக
ஒவ்வொரு நொடிக்கும்
பல்லாயிரம் முறை
இதயம்
துடித்து
அடித்து
துண்டிக்கவிருக்கும் வேலையிலே – ஓர்
வெளிச்சம் விழியின் மூலையிலே

ஒலித்தது அலாரம்
உதித்தது சூரியன்”


-    சௌந்தர்யா -

Wednesday, 8 October 2014



பேசிச்சிரிக்க ஓர் இரவு - அதில்
பார்த்து இரசிக்க ஓர் நிலவு
நட்சத்திரங்கள் மத்தியிலே
நகரும் மேகமாய் நானிருக்க
மின்னல்கள் அடிக்கையிலே
மிளிரும் ஒளியாய் நான்தெரிக்க
இடி முழக்கமும் கேட்காது
இதயம் துடிப்பதும் தெரியாது
பல கனவுகள்
இப்படி தொடரவே
அடிக்கடிவேண்டும்  “குட்டித்தூக்கம்” ..