Wednesday, 7 January 2015

கவிதை எனக்கோர் கைகுட்டை
கண்ணீரை என்றும் துடைப்பதனால்
காலம் எனக்கோர் சுமைதாங்கி
காயத்தில் மீட்டு செல்வதனால்

இளமை என்னும் புத்தகத்தில்
காதல் ஒரு பக்கமாகும்
இதயம் என்னும் கல்வெட்டில்
நினைவு ஒரு அங்கமாகும்                      

பட்டு பட்டு தெரிந்தாலும்
தெளியவில்லை ஏனோ மனம்
விட்டு எவர் சென்றாலும்
விடுவிக்கவில்லை ஏதோ கனம்

காயப்படும் உள்ளங்களே
தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உனை நினைக்கா உயிருக்கு
நினைவென்னும் நிலைகள் எதற்க்கு
உனை மதிக்கா மானிடருக்கு
மனதினுள் இடங்கள் எதற்க்கு

காயப்படுத்தும் உள்ளங்களே
புரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உபயோகிக்க பொருட்கள் உண்டு
காதலிக்க வேண்டாம் பொருட்களை
காதலிக்க மனிதன் உண்டு
உபயோகிக்க வேண்டாம் மனிதர்களை !


                     ---சௌந்தர்யா---




No comments:

Post a Comment