Sunday, 4 January 2015

இடைவெளிகள் பலருக்கு
இடையூராய் இருக்கிறது
இயங்கிவரும் இயந்திர உலகில்
எது நிரந்தரமாய்  நிற்கிறது

பிடித்துப்போய் விட்டால்
பிரிய முடியவில்லை
வெறுத்துப்போய் விட்டால்
ஏற்க முடியவில்லை

மழை வெயில்
பருவம் போல
மனம் குணம்
தினம் மாறிப்போக

உனை நினைத்து நான் வாழ
எனை நினைத்து நீ வாழ
பகல் கனவு பல கண்டு
பகட்டிலே  நம் நாள் ஓட


 இன்றைய நாளிலே யாரின்
இதயமும் பெரிதில்லை
இனையதள வாழ்விலே - நேரில்
பேசுவோருக்கோ மதிப்பில்லை .. L




                     ---சௌந்தர்யா---

No comments:

Post a Comment