என் தேடலிலே கிடைக்கவில்லை
தேவதையே எங்கு சென்றாய்
என் ஜீவன் இங்கே இளைக்கிறது
ஒரு முறையேனும் வந்து செல்வாய்
நீ இல்லா பொழுதுகலை
நரகமென்றே சொல்லிடுவேன்
நீ வந்த பிறகே தான்
உயிர் மூச்சையும் நான் உணர்வேன்
சொல்ல முடியா மகிழ்ச்சி ஒன்று
உன் வருகையிலே கண்டுவிட்டேன்
இனம் புரியா பிரியம் ஒன்று
உன் தொடர்பினிலே புரிந்துகொண்டேன்
யாவும் இங்கு உன் வசமே
உன்னோடு இருப்பதென்றால்
சாவும் இங்கு ஒரு வரமே
உன் மடியில் இறப்பதென்றால் J