Sunday, 21 June 2015

வலி மட்டும் கண்டதனால் வலிமையானது வாழ்க்கை!
.
.
.
இடம் மாறிய இதயம்
திரும்பி வர மறுக்கிறது
ஏன் இந்த கொடுமை
மனம் தடுமாறி துடிக்கிறது

வலிகளிலே கொடிய வலி
உனை பிரிவேன் எனத் தெரிந்தும்
பிடிக்கிறது இன்னும் இன்னும் L

தொட்டுப் பழக வேண்டாம்
தொடர்ந்து வந்தால் அது போதும்
விட்டு விலக வேண்டாம் உன்
அருகாமை  நிலைத்தால் அது போதும்

நீ என்று சொன்னேன்
ஏதும் இங்கு அர்ப்பமானது
நான் என்ற சொல்லில்
உந்தன் நினைவு கலந்துபோனது

மாண்ட உயிர் வாராது      - இது
மனிதன் வாழ்வின் இறுதிநிலை
நீயன்றி
வாழும்  நாட்கள் நகராது – இது
கண்ணை மறைக்கும் காட்சிப்பிழை

அலை கடல் தாண்டி நீ வாழ - உன்
அறைகன பிரிவும் எனை கொள்ள
விடியற்க்காலை அந்தி மாலை
நேரம் காலம் காதலுக்கில்லை

உன்னோடு வாழ்நாள் தொடர்ந்தால்
நிச்சயம் சிரிப்பின் சித்திரம் நானாவேன்
என்னோடு உன் பயணம் கடந்தால்
உன் மன ஓரம் சென்று பத்திரமாவேன்!

குரல் மட்டும் கேட்டாலே
குறை தீர்ந்து போகிறது – உன்
விழி தொட்ட என் தேகம்
இன்னும் அங்கேயே நிற்கிறது

நான் தெரிந்தே இழக்கும் இந்த நல்வாழ்வு
தெரியாமலே போகட்டும் எவருக்கும் !

இறைவன் வரம் கேட்பதுண்டாம்
கதைகளிலே படித்ததுண்டு
அப்படி அவன் கேட்க வந்தால்
சுதந்திரமான வாழ்வு கேட்பேன்
அதில் உன்னோடு  நான் வாழக் கேட்பேன் !

தடுப்பதற்க்கு ஆள் வேண்டாம்
தனிக்காட்டில் ஓர் இடம் போதும்
தவித்தால் கூட நீர் வேண்டாம்- என்
தாகம் தீர்க்க நீ போதும் !


                                -சௌந்தர்யா-
இடஞ்சல்களுக்கு இடைவெளி
.
.
.
இத்தருண வெளிப்பாடாய் 
இதை மட்டும் எழுதுகிறேன்
இனம்புரியா இடர்பாடாய்
இன்னல்களுக்கு ஏங்குகிறேன்
வலிக்கும் என தெரிந்தும்
வாலிபக்காதல் விடுவதில்லை
வறுத்தம் பல இருந்தும்
வாழ்க்கை நின்று போவதில்லை
புரியாததை விளக்க முற்படு
விலக முற்படாதே
பிடிக்காததை தவிர்க்க முற்படு
தகர்க்க முற்படாதே
கற்றோரிடம் கற்றிட வேண்டும்
உற்றோருக்கு உதவிட வேண்டும்
பெற்றோரை என்றும் மதித்திட வேண்டும்
மற்றோரையும் சற்றே புரிந்திட வேண்டும்
வரவு செலவு கணக்கை போல
ஏற்றமும் இறக்கமும் தேடி வர
இன்ப துன்ப அலை போல
அடிப்பதும் அனைப்பதும் மாறி வர
எத்திக்கு சென்றாலும்
துரத்தும் காற்று தொட்டே தீரும்
எந்தப்பக்கம் போனாலும்
எதிலும் காயங்கள் என்பது வந்தே போகும் !
வேண்டுவது இங்கே ஏதுமில்லை
வேண்டாம் இங்கே பலவீனம் மட்டும்
வேண்டாமென்பதற்க்கு ஏதுமில்லை
வேண்டும் இங்கே மனபலம் மட்டும் !!!
வாரித்தர அன்பை தவிர
வேறெதுவும் இல்லை என்று
எவரும் இதை உணர்ந்தாலே
வாழ்வில் வருத்தம் என்பதே கிடையாதே!
- சௌந்தர்யா -

Sunday, 7 June 2015

சின்ன சின்ன சிரிப்பலைகள்
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே

நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்

வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே

வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்

வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது

வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்

உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய்  நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன

கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்

முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே

விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே

பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ...