Sunday, 3 May 2015

வாழ்வா................. இதில் வாழ வா.............
.
.
.
வாழ்க்கையறியேன் நான்
வாழ்வும் அறியேன் நான்
வானம் அறியேன் நான்
வண்ணம் அறியேன் நான்

ஒரு பிறவிக்குள் பல பிறவி
ஒரு பிறப்புக்குள் பல பிறப்பு
ஒன்றியது ஒன்றுமல்ல
மிச்சமிங்கு அடிகள் மட்டும்....

ஆழத்தெரிந்தவன் அழமாட்டான்
அழுகிறவன் எழமாட்டான்
அன்பென்ற ஒன்றை கூட
ஆணையிட்டால் எவனும் தரமட்டான்

இரவில் வரும் இருட்டு
முடியாவிட்டால் ஏது பகல்
பகலில் வந்த வெளிச்சம்
மறையாதிருந்தால் ஏது இருள்

நேரம் கடக்குது விரைவாக
நாட்கள் நகருது அலை போல
அடிக்கடி சோகம் சூழ்ந்தாலும்
அன்பில் வாழுது நம் ஜீவன்

உலகின் மிகக்கொடிய  நோய்களிலே
வறுமை என்பது முதலிடமே
மனதின் மிகப்பெரிய வலிகளிலே
மௌனம் என்பது மாறாததே

எது வலி தந்தாலும்
எது வந்து போனாலும்
அழுகும் நொடி வருந்தாதே
பத்து முறை அழுவதிலே
ஒரு அனுபவம் அடங்கிப்போகும்!


வரவேற்ப்பது மனித இயல்பு -
எதுவென்றாலும்
வரவேற்க்கிறான் மனிதன்
வலி ஒன்றை தவிர......

வேடிக்கையான இந்த உலகில்
மதச்சண்டை இடும் ஒரு ஜாதி
அதுவே எழுதப்பட்ட ஒரே விதி.........

மரக்கிளை போல
ஒட்டியே ஒரு உறவிருக்குமென்றால்
கண்ணீரும் காயமும் கூட இனி
வரவேற்க்கப்படுகிறது ......

இனிமைகள் பல
இழப்புகள் பல
முடியாது இது  சொல்ல சொல்ல

மாற்றம் மாற்றம் மாற்றமே
இதுதான் மனித வாழ்வா
மாறி மாறி மாறி
நீயும் அதிலே வாழ வா............................

-    சௌந்தர்யா -















Saturday, 2 May 2015

என்னில் நீ
.
.
.
நீ மட்டும் போதும்
என் ஜீவன் வாழும்
நீ இல்லா நேரம்
மனமெங்கும் பாரம்

உன்னை இங்கு தாங்கியே
உன்னில் என்னை தொலைத்தேனே
என்னை நானும் தேடியே
எதிலும் உனையே அறிந்தேனே

எப்படி என்னுள் நீ வந்தாய்
அறியாத பேதை நான்
உன்னை பற்றி வரலாறே
எழுதச் சொன்னால் மேதை நான்

சத்தம் போட்டு அழுதிடுவேன்
சங்கடம் போக்க நீ வந்தால்
நித்தம் எல்லாம் உறங்கிடுவேன்
சாய்வது உன் தோல் என்றால்
நேரில் உன்னை பார்க்காவிடிலும்
நேரம் உனக்கே அர்ப்பனமே
நீ என்னை தூக்கி எரிந்தாலும்
என் அன்பு உனக்கே சமர்பனமே


கவிதை எழுத ஆசைபட்டேன்
காகிதங்கள் தந்தாய் நீ
இசை தொடுக்க ஆசைபட்டேன்
திசையெங்கும் கருவிகள் அமைத்தாய் நீ
ஓவியம் தீட்ட ஆசைபட்டேன்
வண்ணங்கள் பரிசாய் கொடுத்தாய் நீ
வானவில் கண்டு ஆசைபட்டேன்
வானமே அள்ளிக்கையில் தந்தாய் நீ............

எதை இங்கு கொடுத்தாலும்
ஏக்கமின்றி ஏற்றிடுவேன்
மௌனம் மட்டும் வேண்டாமே
நான்
உறக்கமன்றி போய்விடுவேன்



பேசிவிடு பேசிவிடு
அந்த பேச்சில் இருக்குது பாதி உயிர்
உறவுகொடு உறவுகொடு
உன் உறவில் வாழுது என் மீதி உயிர்

-    சௌந்தர்யா -