Wednesday, 4 February 2015

என்னில் ஒரு அகராதி
.
.
.
வசப்பட்ட வாழ்க்கையின்
வசந்தங்கள் நீயடி
வதைக்கின்ற இதயத்தின்
வைத்தியங்கள் நீயடி
அன்பென்ற மழைதன்னில்
அரியசுகம் நீயடி
அதைபோன்று ஏதுமிங்கு – நான்
விரும்பவில்லை ஏனடி ?

சிக்கிக்கொண்டாய் நீ மட்டும்
என்
வார்த்தையிலும்
வாழ்க்கையிலும்..
இருந்தும்
சிறைவாசம் உனக்கில்லை
எனக்கே அது தொடர்கிறது

தூர எறி
தூக்கி எறி
வறுத்திவிடு
வெறுத்துவிடு
பயமில்லை எனக்கொன்றும்
பயனில்லை அதற்கொன்றும்

உன் துணையில் இல்லாவிடிலும்
உன் நினைவில் வாழ்ந்திடுவேன்

ஏற்க முடியாது
தரவும் முடியாது
வியாதி ஒன்று உன்னை சூழ்ந்திருக்கிறது !
பரவி விடுமோ என
விரட்டுகிறாய் என்னை நீ !
பரவாவிடிலும்
நீ ஒதுக்கிவிட்டால் நான்
மாய்வது நிச்சயம் !!

தாங்கி பிடிக்க ஆள்
இல்லாத போதில்தான்
கஷ்டங்கள் பேரிடறாய்
உருவெடுக்கிறது !


பருவக்காற்று சுகம் என்பதையும்
பங்குனிவெயில் சுடும் என்பதையும்
மறுக்க முடியாது
மாற்ற முடியாது
அதுபோலத்தான் வாழ்க்கையில்
உன் வரவும் பிரிவும்
தடுக்க முடியாது
தவிர்க்கவும் முடியாது !

பிரிந்திருக்க இருவேறு உயிர் அல்ல நீ
என் உயிரின் ஒரு பாதி நீ !!!


---சௌந்தர்யா---
மூன்று வருடமாய்
தாங்கிய வலி இது
நீ சொல்லாமல் போனதனால்
எழுதிய கவி இது

மண்ணோடு போனாலும்
என்
மனதோடு இருக்கின்றாய் !
செத்தது அன்று உன் உடல் மட்டுமே
வாழுது இங்கு உன் உயிர் மொத்தமே !

ஆசையுடன் இறந்தவர்கள்
ஆவியாக நம்மை சந்திக்க வருவார்களாம்
என்கிறது வதந்தி
அப்படியானால்
அந்த ஆய்வுகூடத்தில்
முதல் ஆளாய் நான் இருப்பேன்
தங்கையே
மீண்டு வா
மீண்டும் வா
விளையாடலாம் ....


மிகக் கொடிய வலிகளில் ஒன்று
  மௌனம்
கொடுத்தது அதை உன்
       மயானம்

கண்ணீர் பார்க்காமல் கண்கள் கூட இருக்கலாம்
கண்ணீர் காணாத கல்லரைகள் எங்கும் இருந்திராது

இறந்தவர்களும்
இழந்த நேரம் போலத்தான்
மீட்டு எடுக்க இயலாது

கட்டிப்போட்டது போல் இருக்கின்றேன்
உன் கைகோர்த்து சென்ற இடத்திலெல்லாம்
நொடிப்பொழுதில் போய்விட்டாய்
யுகம் யுகமாய் அழுகின்றேன்
கோடி முறை தினமும் நான் !

வாழ்க்கை என்பது
வாழ்ந்தவர்களை நினைத்து
வாழ்பவர்கள் அழுவதிலே
கழிகிறது சிலநேரம்..
இன்றும் அப்படித்தான்
உன் நினைவுகளில் அழிகின்றேன்
என் வாழ்க்கையில் தான் நீ இல்லை
என் வார்த்தையிலாவது வாழ்ந்துவிடு !

எப்படி எப்படி
எழுதி தீர்த்தாலும்
கண்ணீர் வடித்தாலும்
காலம் கடந்தாலும்

நீ இல்லாத
நிஜம்
தரும் வலி மட்டும்
நிரந்தரமே !

---சௌந்தர்யா---